May 14, 2008

ஒரு செடியில் இரு மலர்கள்

எல்லோரும் காதலிக்கிறார்கள் என்று
என் நண்பனும் காதலித்தான் ...

தோல்வியே பரிசாக வந்தது நண்பனுக்கு ...
காரணம் ...

தன் காதலை மலரிடம் சொன்ன போது
புயலென வாசம் வந்தது ...

நாம் இருவரும் ஒட்டு செடியில் பூத்த
இரு மலர்கள் அல்ல ...
ஒரே செடியில் பூத்த இரு மலர்கள் என்று ...

பி. கு: கல்லூரியில் நண்பனுக்காக நண்பன் எழுதியது

May 12, 2008

தேவதைகளின் தேவதை

உன் மௌனம் 1000 மொழி பேசும் ...
உன் ஒற்றை பார்வை 1000 கணைகளை வீசும் ...
உன் வார்த்தை 1000 குயில்களை அடிமை படுத்தும் ...
உன் ஸ்பரிசம் 1000 கற்களை உயிர் பெற செய்யும் ...

மேலும் ...

என்னை மறக்க செய்தவள் நீ ...
என் தூக்கம் கலைத்தவள் நீ ...
என்னையே தொலைக்க வைத்த நீ ...

தேவதைகளின் தேவதை

என்றெல்லாம் ...
பொய் சொன்னால் தான் ...

நான் கவிஞனா ... @#$%&